ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியான நடிகை பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருக்கும்போது தனது வழக்கறிஞர் மூலமாக பல சலுகைகள் வேண்டும் என அவர் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் அதே சமயம் மறைமுகமாக அவருக்கு சிறையில் அனைத்து வித வசதிகளும் கிடைத்தன. அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவர் இங்கே இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் வில்சன் கார்டன் நாகா என்கிற கேங்ஸ்டர் தான். அதனால் அந்த பகுதியில் எப்போதும் போலீசார் பெரிய அளவில் சோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் தர்ஷன் இருந்த அந்த சிறைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கே 15 மொபைல்கள், 7 எலக்ட்ரிக் அடுப்புகள், 5 கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணமும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கின. இவையெல்லாம் தர்ஷன் அங்கிருந்த போது அவருக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.