விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 50 வருடம் என்கிற மாபெரும் இலக்கை தொட்டிருக்கிறார். அதிலும் இப்போது வரை தனித்து ஹீரோவாக நடித்தே இந்த சாதனையை செய்திருப்பவர் ரஜினி ஒருவர்தான். இத்தனை வருடங்கள் இவர் திரையுலகில் பயணித்ததால் மற்ற எந்த நட்சத்திரங்களும் செய்ய முடியாத பல புதுமையான விஷயங்களையும் சாதனைகளையும் கூட செய்திருக்கிறார். அதில் ஒன்றுதான் அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்களும் கூட அவருடன் பின்னாளில் ஜோடியாக, சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
அந்த வகையில் கடந்த 1980ல் பொல்லாதவன் என்கிற படத்தில் ரஜினியும் நடிகை லட்சுமியும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு 13 வருடங்கள் கழித்து 1993ல் வெளியான எஜமான் படத்தில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல நெற்றிக்கண் படத்தின் ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் அவரது தங்கையாக நடித்தார்.
ரஜினிக்கு அடுத்ததாக நடிகர் மோகன்லால் அவரது முதல் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். அவரது மகளான சரண்யா பாக்யராஜ் கிட்டத்தட்ட 26 வருடம் கழித்து 2006ல் மலையாளத்தில் வெளியான போட்டோகிராபர் என்கிற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கமல் நடிப்பில் விரைவில் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். கல்யாணியின் அம்மா தான் நடிகை லிஸி லட்சுமி. இவர் இதற்கு முன்னதாக 1985ல் ஹிந்தியில் வெளியான சாகர், 1986ல் தமிழில் வெளியான விக்ரம் ஆகிய படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது அவரது மகள் கிட்டத்தட்ட 40 வருடம் கழித்து கமல்ஹாசனின் படத்தில் இணைந்துள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்..




