பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மதராஸி படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து பராசக்தியில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனிடத்தில் வெங்கட் பிரபுவும் ஒரு கதை சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது எனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார் வெட்கட் பிரபு. அதனால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும் வெங்கட்பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு வெங்கட்பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.