சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மதராஸி படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து பராசக்தியில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனிடத்தில் வெங்கட் பிரபுவும் ஒரு கதை சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது எனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார் வெட்கட் பிரபு. அதனால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும் வெங்கட்பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு வெங்கட்பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.