பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை |
கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கியிருந்தார். இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் சிதம்பரம். இந்த படத்தின் கதையை கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் தான் எழுதி இருக்கிறார். இன்னொரு பக்கம் இதே ஜித்து மாதவன் தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.