நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கியிருந்தார். இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் சிதம்பரம். இந்த படத்தின் கதையை கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் தான் எழுதி இருக்கிறார். இன்னொரு பக்கம் இதே ஜித்து மாதவன் தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.