இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சமீப காலமாக தமிழகத்தில் பிரபலங்களின் வீடு, அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் மேற்கொண்ட சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. திடீரென இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அதிகாரிகளின் சோதனை காரணமாக சிறிது நேரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.