டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த சில நாட்களாகவே, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகளுக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும், சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவருவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் வீடு, அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று (அக்.27) மர்ம நபர் மூலமாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிட சென்றனர்.
ஆனால், நடிகர் ரஜினி தனது வீட்டை சோதனையிட சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சோதனை செய்யாமலேயே போலீசார் திரும்பினர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.