தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கடந்த சில நாட்களாகவே, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகளுக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும், சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவருவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் வீடு, அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று (அக்.27) மர்ம நபர் மூலமாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிட சென்றனர்.
ஆனால், நடிகர் ரஜினி தனது வீட்டை சோதனையிட சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சோதனை செய்யாமலேயே போலீசார் திரும்பினர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.