ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் இந்திய அரசின் சார்பில் தேர்வாகியுள்ளது.
இதில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் பற்றிய கதை.
இந்நிலையில், 'ஹோம்பவுண்ட்' படத்தின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஓடிடியில் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் இந்தியா மீது எழுத்தாளர் பூஜா சாங்கோய்வாலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், "நான் எழுதிய 'ஹோம் பவுண்ட்' என்ற நாவலின் கதையை தழுவி படத்தை எடுத்துள்ளனர். தலைப்பை தவறாக பயன்படுத்தியது மட்டுமின்றி, படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளது. காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு ஆகியவற்றையும் காப்பி அடித்துள்ளனர். எனவே படத்தை தடை செய்து, எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




