தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிவராஜ் குமார், ''நடிகர்கள் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு நன்மை செய்யலாம்'' என்று ஒரு கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான சுதீப், விஜயின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''சில நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு செல்கிறார்கள். ஆனால் சிலர் மார்க்கெட்டில் இருக்கும்போதே அரசியலுக்கு செல்கிறார்கள். இது ரொம்ப பெரிய விஷயம். சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையே இதற்கு காரணம். அதனால் நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். அவர் அரசியலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மக்களுக்கு நன்மை செய்வார் என நான் நம்புகிறேன்'' என கூறியிருக்கிறார். இந்த நடிகர் சுதீப், விஜய் நடித்த 'புலி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.