தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகர் சிவராஜ் குமார், ''நடிகர்கள் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு நன்மை செய்யலாம்'' என்று ஒரு கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான சுதீப், விஜயின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''சில நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு செல்கிறார்கள். ஆனால் சிலர் மார்க்கெட்டில் இருக்கும்போதே அரசியலுக்கு செல்கிறார்கள். இது ரொம்ப பெரிய விஷயம். சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையே இதற்கு காரணம். அதனால் நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். அவர் அரசியலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மக்களுக்கு நன்மை செய்வார் என நான் நம்புகிறேன்'' என கூறியிருக்கிறார். இந்த நடிகர் சுதீப், விஜய் நடித்த 'புலி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.