நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பாரதிராஜா இயக்கிய 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சுபிக்ஷா கிருஷ்ணன். அதன்பிறகு 'கடுகு, கோலிசோடா -2, கண்ணை நம்பாதே, சந்திரமுகி-2' என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 3 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
சுபிக்ஷா பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் படங்களில் நடிப்பதற்கு இடையே நடனப் பள்ளியில் பரதமும் கற்றுக்கொடுக்கிறார். மேலும், சில மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரத கலையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்தர்கள் முன்னிலையில் பரதம் ஆடி அசத்தினார்.
சுபிக்ஷா கூறுகையில், ''பரதம் கலை தெரிந்த நடிகையாக இருப்பது பெருமை. படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இந்த பரதம் எனக்கு உதவியாக இருக்கிறது. மக்களின் நேரடி பார்வையில் என் கலையை சமர்பிக்க எப்போதும் தயங்கியது இல்லை. சமீபத்தில் கூட கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினேன். பெரிய மேடையை விட, இதுபோல் மக்களின் பார்வையில் நேரடியாக நடனமாடுவதையே அதிகம் விரும்புகிறேன்'' என்றார்.