அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

'மேயாத மான், ஆடை' ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். 'மாஸ்டர், லியோ, விக்ரம்' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர். தற்போது 'சர்தார் 2, கராத்தே பாபு' ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு ரத்னகுமார், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' மற்றும் லோகேஷ் கனகராஜின் 'ஜீ ஸ்குவாட்' இருவர் நிறுவனங்களின் தயாரிப்பில் '29' என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக 'ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க 2000ம் காலகட்ட காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை நேற்று அலுவலக பூஜை உடன் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.