பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இயக்குனர் பாரதிராஜா திரைப்படத்திற்கு வந்ததே நடிகராகத் தான். ஆனால் நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் உதவி இயக்குனர் ஆகி பின்பு இயக்குனர் ஆனார். என்றாலும் அவரது நடிப்பு ஆர்வம் தீராமல் இருந்ததால் அவரது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவராகவே நடித்தார். சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் பாரதிராஜா.
பாரதிராஜா பற்றி இன்னும் ஒரு அறியப்படாத முகம் அவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பது. 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் விஜயன் நடித்த போது அவரது குரலில் மலையாள வாசனை இருந்ததால் பாரதிராஜாவே அவருக்கு டப்பிங் பேசினார். காதல் வழிந்து ஓடும் அந்த படத்தின் வசனங்கள் இப்போதும் ரசிக்கப்படுகிறது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் தியாகராஜனை வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் தியாகராஜனின் குரல் ஒரு மீனவ சண்டியரின் குரலாக இல்லை. இதனால் அவருக்கும் பாரதிராஜாவில் டப்பிங் பேசினார். 'வேதம் புதிது' படத்தில் சில காரணங்களால் நிழல்கள் ரவி டப்பிங் பேச முடியாததால் அதற்கும் பாரதிராஜாவே பேசினார்.
இயக்குனர் மணிவண்ணனை 'கொடி பறக்குது' படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். மணிவண்ணனின் நையாண்டித்தனமான குரல் வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இல்லாததால் அதற்கும் பாரதிராஜாவே டப்பிங் பேசினார்.