பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” | எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து |

நடிகர் ரவிமோகன் சில மாதங்களாக மனைவியுடன் சண்டை, விவாகரத்து, கெனிஷா நட்பு என சர்ச்சை செய்திகளில் அடிபட்டு வருகிறார். மறுபக்கம் சொந்த பட நிறுவனம், யோகிபாபுவை வைத்து படம் என்று பிஸியாக இருக்கிறார். அடிக்கடி சினிமா, பொது நிகழ்ச்சிகளிலும் தோழி கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். மனைவி ஆர்த்தியை கோபப்படுத்த இ்பபடி செய்வதாக கேள்வி. இந்நிலையில், ரவிமோகன் கோவாவில் வீடு, நிலம் வாங்கியிருக்கிறார். அங்கே செட்டில் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீடு, பின்னர், அடையார் கேட் அருகே தனிக்குடித்தனம், அடுத்து ஈசிஆரில் பெரிய வீடு ஆகியவற்றில் வசித்து வந்தவர், இப்போது தமிழகத்தை விட்டு வெளியே வசிக்க நினைக்கிறார். அஜித், யுவன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் துபாயை தேர்ந்தெடுத்ததுபோல, இவர் கோவாவை செலக்ட் செய்துள்ளார். அதில் கெனிஷாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி, அவர் கோவாவில் அதிகம் வசிப்பார். படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என்றால் சென்னை வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.




