
துபாயில் செட்டில் ஆனது ஏன் : யுவன் சங்கர் ராஜா விளக்கம்
விக்ரம் பிரபு கூறியதாவது : "இயக்குனர் சித்தார்த் என்னிடம் முதன்முதலில் கதை கூறும்போது, வெறும் காட்சி விவரிப்பாக இல்லாமல், ஆடியோவுடன் கூடிய ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸாக கதையை கூறினார் . தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அந்த நரேஷன் தந்தது. இயக்குனர் இந்த திரைக்கதைக்காக இரண்டு ஆண்டுகள் உழைத்துள்ளார். தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரே பாணி படங்களில் தேங்கி நிற்காமல், தொடர்ந்து புதிய விஷயங்களை ஆராய விரும்புகிறேன். புதுமுக இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் என்னை அணுகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
இயக்குனர் சித்தார்த் பேசுகையில், "விக்ரம் பிரபு மற்றும் யுவன் சாருடன் இணைவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது . மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட, அதே நேரத்தில் முற்றிலும் வணிக ரீதியிலான ஒரு புதுமையான கதையாக இது இருக்கும். ஒரு குறிப்பிட்ட லேண்ட்ஸ்கேப் மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பற்றிய உலகத்தை இதில் உருவாக்கியுள்ளோம். இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பரிமாணத்தில் விக்ரம் பிரபுவை இப்படத்தில் பார்க்கலாம்" என்றார்.
யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "இத்திரைப்படம் மியூசிக்கலாகவும், முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பாணியிலும், ஒரு புதுமையான விஷுவல் லாங்குவேஜ் உடனும் அமையவுள்ளது. இதில் முற்றிலும் ஒரு புதிய மியூசிக் ஜானரை கொண்டு வர முயற்சித்து வருகிறோம். துபாயில் வசித்தாலும் நான் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு இருக்கிறேன். பணிகளுக்கு ஏற்ப அங்கும், இங்கும் டிராவல் செய்கிறேன். இந்த படத்தில் நான் பாடவில்லை, பாடினால் நன்றாக இருக்கும்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!