கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜை பலரும் திட்டி தீர்த்தனர். அவரால்தான் படம் ஹிட் ஆகவில்லை. படத்தில் கதை, திரைக்கதை சரியில்லை என விமர்சனம் செய்தனர். இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார் லோகேஷ். கூலி வெளியான சில நாட்களில் வெளிநாடு பறந்துவிட்டார். அடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் பட வேலைகளில் பிஸியாக இருந்தார். இப்போது கூலி விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில் 'எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூலி விமர்சனங்களை மதிக்கிறேன். கூலி படத்துக்கு பின் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தேன். அது குறித்து பேசவில்லை. ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்த படத்தில் தவறுகளை சரி செய்வேன். அதேசமயம் விமர்சனங்களை தாண்டி கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அதற்கு காரணமாக மீடியா, மீம்ஸ், யுடியூப்பர் ஆகியோருக்கு நன்றி. ஆகவே, ரசிகர்களுக்கு நன்றி சொல்கிறேன். என் அடுத்த படங்கள் குறித்து படக் கம்பெனி அறிவிக்கும்''' என்று பேசியுள்ளார்.
இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படமாக கூலி இருப்பது குறிப்பிடத்தக்கது.