வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சமீப வருடங்களாகவே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் வெளியாகும்போது முதல் நாள் வசூல், அதன்பின் மொத்த வசூல், படம் சரியாக ஓடவில்லை என்றால் அந்த படத்திற்கு எவ்வளவு நட்டம் என்கிற விவரங்கள் சோசியல் மீடியாவில் ஒவ்வொரு விதமாக வெளியாகி வருகின்றன. சில விவரங்களை தயாரிப்பாளர் தரப்பே அறிவிக்கிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் நிவின்பாலி இதுகுறித்து கூறும்போது, '2எதற்காக படத்தின் லாப நட்ட கணக்கு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது தேவையில்லாத ஒன்று'' என்று கூறியுள்ளார்.
நிவின்பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படம் நேற்று கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார் நிவின்பாலி. அங்கே பத்திரிகையாளர்களிடம் அவர் உரையாடியபோது கடந்த 2025ம் வருடத்தில் வெளியான மலையாள படங்களின் லாப நட்ட கணக்கு குறித்து சமீபத்தில் வெளியான பட்டியல் பற்றி நிவின்பாலியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிவின்பாலி, “இப்படி லாப நட்ட கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது தேவையற்றது. இதற்கு முன்பு அது போல இருந்தது இல்லை. இப்படி அறிவித்தால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கும் பாதிப்பு. புதிதாக படம் தயாரிக்கலாம் என்று வருபவர்களையும் தயங்கி நிறுத்தி வைத்து விடும். படத்தின் லாப நட்ட கணக்குகள் படம் சம்பந்தப்பட்டவர்கள் உடனேயே மட்டும் இருப்பது தான் சினிமாவுக்கு நல்லது. எல்லா திரையுலகிலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மலையாளத் திரையுலகம் முன்னோடியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.




