முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

ரூபா ஐயர் இயக்கம், தயாரிப்பில் ஸ்ரேயாஸ் தல்பே, ரூபா ஐயர், சுரேஷ் ஓபராய், இந்திரா திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஆசாத் பாரத்'. சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
இந்த படம் குறித்து இந்திரா திவாரி கூறுகையில், ‛‛இந்த கதையை கூறும்போதே என் ஆழ் மனதை பாதித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் வரலாற்று பாடங்களுக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் அளவற்ற தியாகம், தைரியம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் பயணங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் கதை என்னை உணர்ச்சிப்பூர்வமாக நெகிழச் செய்தது. இந்த படம் சுதந்திரத்தை மிகைப்படுத்திக் காட்டாமல், அதற்காக செலுத்தப்பட்ட பெரும் விலையை நேர்மையாகச் சித்தரிக்கிறது. இன்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் மதிப்புகளை பார்வையாளர்களுக்கு நினைவூட்டும். இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. அந்த காலத்தின் சமூகச் சூழலை, அதாவது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பேசினார்கள், பயந்தார்கள் மற்றும் நம்பினார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டு நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.