குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

தமிழில் பிரியமுடன், இரணியன், யூத், ஜித்தன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. அதன் பின்னர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான ஜித்தன் 2, தோட்டா, இங்கு என்ன சொல்லுது உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் இவர் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதில் யூத் பட காலகட்டத்தில் வின்சென்ட் செல்வாவிடம், மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வின்சென்ட் செல்வா இயக்குனராக களமிறங்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அவர் உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மிஷ்கினை அணுகியுள்ளனர். மிஷ்கின் தன் குருநாதருக்கு நன்றி கடன் செலுத்தும் வாய்ப்பை உணர்ந்து இந்த படத்தில் நான் சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளாராம்.