நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

'ராட்சசன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ஆர்யன். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரவின் கே இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 31ம் தேதி இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள சினிமா குறித்து பேசிய விஷ்ணு விஷால், 'ஆர்டிஎக்ஸ்' மற்றும் 'ஆவேசம்' படங்கள் தன்னை கவர்ந்தன என்று கூறியுள்ளார்.. அது மட்டுமல்ல இயக்குனர் பசில் ஜோசப்பின் படங்கள் தன்னை வியக்க வைக்கின்றன என்றும் கூறினார். மேலும் ஆர்யன் படத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகளின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2023ல் மம்முட்டி நடிப்பில் ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம், ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரியும் அவருடன் நான்கு பேர் கொண்ட குழுவினரும் பல மாநிலங்களுக்கு பயணித்து இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிப்பது போல கதை அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.