பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! |

'ராட்சசன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ஆர்யன். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரவின் கே இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 31ம் தேதி இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள சினிமா குறித்து பேசிய விஷ்ணு விஷால், 'ஆர்டிஎக்ஸ்' மற்றும் 'ஆவேசம்' படங்கள் தன்னை கவர்ந்தன என்று கூறியுள்ளார்.. அது மட்டுமல்ல இயக்குனர் பசில் ஜோசப்பின் படங்கள் தன்னை வியக்க வைக்கின்றன என்றும் கூறினார். மேலும் ஆர்யன் படத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகளின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2023ல் மம்முட்டி நடிப்பில் ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம், ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரியும் அவருடன் நான்கு பேர் கொண்ட குழுவினரும் பல மாநிலங்களுக்கு பயணித்து இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிப்பது போல கதை அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.