டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார். ஆனாலும் அவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'புதுப்பேட்டை' மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும் கூறி வந்தார் செல்வராகவன்.
ஆனால் இன்னும் அதற்கான எழுத்து வடிவம் முழுமை பெறவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செல்வராகவன், இந்தப் படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி நடிப்பார்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கிட்டதட்ட 3 வருடங்களுக்கு தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காது. இன்னும் இந்த படங்களின் கதையையும் நான் முழுமையாக முடிக்கவில்லை. அதே சமயம் இந்த படங்களின் இறுதிக்காட்சிகளில் நான் மற்ற நடிகர்களை வைத்து முடித்திருப்பதால் தனுஷ், கார்த்தி இல்லாமலேயே இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை என்னால் எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.