'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார். ஆனாலும் அவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'புதுப்பேட்டை' மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும் கூறி வந்தார் செல்வராகவன்.
ஆனால் இன்னும் அதற்கான எழுத்து வடிவம் முழுமை பெறவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செல்வராகவன், இந்தப் படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி நடிப்பார்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கிட்டதட்ட 3 வருடங்களுக்கு தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காது. இன்னும் இந்த படங்களின் கதையையும் நான் முழுமையாக முடிக்கவில்லை. அதே சமயம் இந்த படங்களின் இறுதிக்காட்சிகளில் நான் மற்ற நடிகர்களை வைத்து முடித்திருப்பதால் தனுஷ், கார்த்தி இல்லாமலேயே இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை என்னால் எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.




