ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா, பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'உஸ்தாத் பகத்சிங்'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் மிகவும் குறைவான வசூலையே தந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'துரந்தர் 2' படத்துடன் இப்படத்தை வெளியிட்டது தவறு என்பதுதான் பரவலான கருத்தாக உள்ளது.
மேலும், இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான 'டிரோல்கள்' வந்தன. அது குறித்து படத்தின் இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “ட்ரோலர்கள் எதையும் ட்ரோல் செய்ய முழு சுதந்திரம் உடையவர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். உதாரணமாக, 'காட்சி சரியாக எழுதப்படவில்லை' அல்லது 'இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்', 'முதல் பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தது' போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன்.
ட்ரோல் விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் அவர்களின் அடையாளமோ, இருப்பிடமோ தெரியாது. அவர்களே தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.
நான் ஏதாவது சொன்னால், அதற்கான பொறுப்பையும் பொறுப்புணர்வையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இருளில் கற்களை எறியும் மக்களுக்கு அது ஒன்றல்ல. நான் ட்ரோல் செய்யப்பட்ட விதத்தில், எக்ஸ் தளத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே விட்டிருப்பேன். ட்ரோலர்கள் அல்லது வசூலைப் பற்றி பேசுபவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
நான் சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது முதலில் என்னை ட்ரோல் செய்தவர்கள் என் பெற்றோர்தான். 'நீ இயக்குநராக ஆக முடியும் என்று எப்படி நினைக்கிறாய் ?' என்று யாராவது சொல்வது புதிதல்ல. அவர்கள் அவதூறான மொழியைப் பயன்படுத்தினால் அல்லது எல்லையைத் தாண்டினால் நான் பிளாக் செய்கிறேன் அல்லது புகார் செய்கிறேன். இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட அனைத்து சவால்களையும் தாண்டியதில் நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்,” என்று பேசியுள்ளார்.
இப்படம் சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான ஒரு படம் என்கிறார்கள். ஆனால் வசூல் இதுவரையில் 100 கோடியை நெருங்கவில்லை. பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி சுமார் 75 கோடியை நெருங்கியிருக்கும் என்கிறார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இதற்கு மேல் படம் ஓட வாய்ப்பில்லை. எனவே, 100 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படலாம் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.




