Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா?

26 மார், 2026 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Ustaad-Bhagat-Singh-Will-there-be-a-loss-of-more-than-Rs.-100-crore
Advertisement

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா, பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'உஸ்தாத் பகத்சிங்'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் மிகவும் குறைவான வசூலையே தந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'துரந்தர் 2' படத்துடன் இப்படத்தை வெளியிட்டது தவறு என்பதுதான் பரவலான கருத்தாக உள்ளது.

மேலும், இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான 'டிரோல்கள்' வந்தன. அது குறித்து படத்தின் இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “ட்ரோலர்கள் எதையும் ட்ரோல் செய்ய முழு சுதந்திரம் உடையவர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். உதாரணமாக, 'காட்சி சரியாக எழுதப்படவில்லை' அல்லது 'இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்', 'முதல் பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தது' போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன்.

ட்ரோல் விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் அவர்களின் அடையாளமோ, இருப்பிடமோ தெரியாது. அவர்களே தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

நான் ஏதாவது சொன்னால், அதற்கான பொறுப்பையும் பொறுப்புணர்வையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இருளில் கற்களை எறியும் மக்களுக்கு அது ஒன்றல்ல. நான் ட்ரோல் செய்யப்பட்ட விதத்தில், எக்ஸ் தளத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே விட்டிருப்பேன். ட்ரோலர்கள் அல்லது வசூலைப் பற்றி பேசுபவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

நான் சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது முதலில் என்னை ட்ரோல் செய்தவர்கள் என் பெற்றோர்தான். 'நீ இயக்குநராக ஆக முடியும் என்று எப்படி நினைக்கிறாய் ?' என்று யாராவது சொல்வது புதிதல்ல. அவர்கள் அவதூறான மொழியைப் பயன்படுத்தினால் அல்லது எல்லையைத் தாண்டினால் நான் பிளாக் செய்கிறேன் அல்லது புகார் செய்கிறேன். இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட அனைத்து சவால்களையும் தாண்டியதில் நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன்,” என்று பேசியுள்ளார்.

இப்படம் சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான ஒரு படம் என்கிறார்கள். ஆனால் வசூல் இதுவரையில் 100 கோடியை நெருங்கவில்லை. பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி சுமார் 75 கோடியை நெருங்கியிருக்கும் என்கிறார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இதற்கு மேல் படம் ஓட வாய்ப்பில்லை. எனவே, 100 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படலாம் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள்ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் ... இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap