தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

1987ம் ஆண்டு சிவகுமார் 'இனி ஒரு சுதந்திரம்' என்ற படத்தில் நடித்தார். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகுமார் சுதந்திரப் போராட்ட தியாகியாக நடித்தார். திருப்பூர் குமரனோடு போராடும்போது காலில் அடிபட்ட ஒரு சுதந்திர போராட்ட தியாகி பற்றிய கதை.
கதைப்படி அந்த தியாகியின் பல ஏக்கர் நிலத்தை அணை கட்டுவதற்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். அதற்கு நஷ்ட ஈடாக தரவேண்டிய 40 ஆயிரம் ரூபாயை பெறுவதற்கு அந்த தியாகி படும் கஷ்டங்களை படம் சொல்லியது. வாழ்நாள் முழுக்க அகிம்சையை கடைபிடித்த அந்த தியாகியை ஒரு கொலை செய்ய வைத்து விடும் இந்த சமூகம்.
படத்தை எடுத்து முடித்ததும் அது சிவாஜியிடம் போட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜி சொன்னார் 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிச்சேன். வெள்ளைக்காரனை எதிர்த்து 2 கப்பலோட்டின மனிதன் கடைசில பெரம்பூர் பக்கம் பெட்ரோல் வண்டி தள்ளி பொழைச்சாராம். அந்த விடுதலைப் போராட்ட தியாகி வேடத்தில் நடிச்சேன். தமிழ்நாட்டு ஜனங்க, பட்டை நாமத்தை என் நெத்தியில் போட்டுட்டாங்க... நீ ( சிவகுமார்) சுதந்திர போராட்ட தியாகியா நடிச்சிருக்கே. நாமக்கட்டிய கொழைச்சிட்டு இருக்காங்க. தயாரா இரு" என்றாராம்.
அவரது கணிப்புபடியே 'இனி ஒரு சுதந்திரம்' படமும் படுதோல்வி அடைந்தது. சிவாஜி மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்த படத்தில் ஒன்று 'கப்பலோட்டிய தமிழன்'. அந்தப் படம் அடைந்த தோல்வி சிவாஜியை மிகவும் பாதித்தது அதன் வெளிப்பாடுதான் அவர் சொன்ன கருத்து.