நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஒரு காலத்தில் மேடை இசை கச்சேரிகளை கடுமையாக விமர்சித்த இளையராஜா, தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக நாடுகள் முதல் உள்ளூர்கள் வரை அவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. தனது இசை அனுபவங்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அடுத்து சிம்பொனிக்கான இசையை உருவாக்கி வரும் இளையராஜா அதே கையோடு மகள் பவதாரிணி பெயரில் ஒரு மகளிர் இசை குழுவையும் உருவாக்கி வருகிறார்.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் உருவான 'ராசைய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமானார். 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அமிர்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இளையராஜா தன் மகள் நினைவாக, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். அதோடு 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமே இணைந்து இதனை நடத்த உள்ளார்கள். இதற்காக தனது ஸ்டூடியோவில் ஆடிசன் நடத்தி வருகிறார்.