இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' |

ஒரு காலத்தில் மேடை இசை கச்சேரிகளை கடுமையாக விமர்சித்த இளையராஜா, தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக நாடுகள் முதல் உள்ளூர்கள் வரை அவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. தனது இசை அனுபவங்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அடுத்து சிம்பொனிக்கான இசையை உருவாக்கி வரும் இளையராஜா அதே கையோடு மகள் பவதாரிணி பெயரில் ஒரு மகளிர் இசை குழுவையும் உருவாக்கி வருகிறார்.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் உருவான 'ராசைய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமானார். 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அமிர்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 
இளையராஜா தன் மகள் நினைவாக, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். அதோடு 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமே  இணைந்து இதனை நடத்த உள்ளார்கள். இதற்காக தனது ஸ்டூடியோவில் ஆடிசன் நடத்தி வருகிறார்.