2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வளர்ந்துவிட்ட எல்லா காமெடி நடிகர்களுமே ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பார்கள். ஆனால் அதனை அவர்களால் தொடர முடியாமல் மீண்டும் காமெடியனாகி விடுவார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் சமீபத்தில் ஹீரோவாகியிருக்கும் சூரி வரை இது பொருந்தும்.
இதில் கவுண்டமணி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா. காமெடியனாக நடித்தாலும் ஹீரோவுக்கு இணையான சம்பளத்துடன் நட்சத்திர காமெடியனாக கவுண்டமணி வலம் வந்தபோது அவர் நாயகனாக நடித்த முதல் படம் 'பிறந்தேன் வளர்ந்தேன்'.
விஜயசிங்கம் என்ற புதுமுகம் இயக்கிய இந்த படத்தில் கவுண்டமணி ஜோடியாக ஜீவிதா நடித்தார். இவர்களுடன் எஸ்.வி.சேகர், ராஜீவ், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர்.
இந்த படம் வெற்றிபெறவில்லை, என்றாலும் ‛பணம் பத்தும் செய்யும், கிளி ஜோசியம்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் நகைச்சுவை பாதைக்கே திரும்பினார். தனது ரீ எண்ட்ரியில் 'ஒத்த ஓட்டு முத்தையா', '49 ஓ' படங்களில் ஹீரோவாக நடித்தார். அவைகளும் வெற்றி பெறவில்லை.