ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

வளர்ந்துவிட்ட எல்லா காமெடி நடிகர்களுமே ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பார்கள். ஆனால் அதனை அவர்களால் தொடர முடியாமல் மீண்டும் காமெடியனாகி விடுவார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் சமீபத்தில் ஹீரோவாகியிருக்கும் சூரி வரை இது பொருந்தும்.
இதில் கவுண்டமணி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா. காமெடியனாக நடித்தாலும் ஹீரோவுக்கு இணையான சம்பளத்துடன் நட்சத்திர காமெடியனாக கவுண்டமணி வலம் வந்தபோது அவர் நாயகனாக நடித்த முதல் படம் 'பிறந்தேன் வளர்ந்தேன்'.
விஜயசிங்கம் என்ற புதுமுகம் இயக்கிய இந்த படத்தில் கவுண்டமணி ஜோடியாக ஜீவிதா நடித்தார். இவர்களுடன் எஸ்.வி.சேகர், ராஜீவ், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர்.
இந்த படம் வெற்றிபெறவில்லை, என்றாலும் ‛பணம் பத்தும் செய்யும், கிளி ஜோசியம்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் நகைச்சுவை பாதைக்கே திரும்பினார். தனது ரீ எண்ட்ரியில் 'ஒத்த ஓட்டு முத்தையா', '49 ஓ' படங்களில் ஹீரோவாக நடித்தார். அவைகளும் வெற்றி பெறவில்லை.




