கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

நடிகையும், தயாரிப்பாளருமான கண்ணாம்பா 1956ம் ஆண்டு 'நாக பஞ்சமி' என்ற ஒரு படத்தை தயாரித்து, நடித்தார். இந்தப் படத்தை கே.நாகபூஷனம் இயக்கினார். அஞ்சலி தேவி, எஸ்.வரலட்சுமி, சித்தூர் நாகைய்யா, தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்த கதையின் உரிமத்தை வாங்கி, 'நாக தேவதா' என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தார் ஏவிஎம் செட்டியார். இதில் நாகேந்திர ராவ், ஜமுனா, சவுகார் ஜானகி நடித்தனர். ஆர்.சுதர்சனம் இயக்கினார்.
ஏவிஎம் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி படத்தை தயாரித்து தெலுங்கில் வெளியிட்டு பெரிய வெற்றியை பெற்றது. சில பிரச்சினைகள் காரணமாக கண்ணாம்பாவால் படத்தை முடிக்க முடியவில்லை. படம் தாமதமானது. இதனால் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் தயாரித்த 'நாக தேவதா' படத்தை 'நாக தேவதை' என்ற என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டது. இங்கும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக தனது 'நாக பஞ்சமி' படத்தை ஒரு வழியாக முடித்த கண்ணாம்பா அதனை தமிழில் வெளியிடாமல் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். அங்கு படம் வெற்றி பெறவில்லை.