புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

2026ம் வருடத்திற்கான டில்லி சர்வதேச திரைப்பட திருவிழா டில்லியில் துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் பாலகிருஷ்ணா, ஷர்மிளா தாகூர் மற்றும் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணாவும் வந்திருந்தார்.
தனது கணவரின் மரணத்துக்கு பிறகு அவர் சார்பாக இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினியும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்தார். அப்போது ஹேமமாலினி பாதங்களை தொட்டு வணங்கினார் பாலகிருஷ்ணா. அவரது இந்த செயல் அங்கிருந்த பலரையும் ஆச்சர்யப்படவும் நெகிழவும் வைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கவுதமி புத்திர சடகர்னி படத்தில் பாலகிருஷ்ணாவின் அம்மாவாக ஹேமமாலினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




