ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகை மல்லிகா தமிழில் திருப்பாச்சி, ஆட்டோகிராப், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவை அல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் பற்றி அவர் கூறியதாவது, "விஜய் மிகவும் அமைதியானவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிறைய பேசிக்கிட்டே இருக்கணும். அவரோட அமைதியான குணத்தை விட்டு மக்களுக்காக இப்போது பேச ஆரம்பித்துள்ளார் . அவரா இப்படிப் பேசுகிறார்? என ஆச்சர்யமா உள்ளது.
சினிமாவில் உச்சத்தில் உள்ளவர், அது எல்லாம் விட்டு மக்களுக்காக நல்லது பண்ண அரசியலுக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட நபரை புரிந்து கொள்ளாமல், கரூர் பிரச்னையில் சிலர் தப்பா பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக உள்ளது . அதில் அரசியல் சதி உள்ளதாக நான் நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறார்கள் என கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.




