நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை சங்கீதா பிஜ்லானி. ஒருகாலத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து காதல் கிசுகிசுகளில் சிக்கிய இவர், பின்னர் கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் புனே அருகில் பாவனா டேம் அருகில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த ஜூலை மாதம் சில மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்களையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்போது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சங்கீதா பிஜ்லானி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததாலும் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து தன்னுடைய புகார் எந்த நிலையில் என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளார். அது மட்டுமல்ல கிட்டதட்ட 20 வருடங்களாக தான் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு அங்கே வசிப்பதற்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல தோன்றுவதாகவும் கூறி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுவதாக கூறி அதற்கான உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம் சங்கீதா பிஜ்லானி.




