பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை சங்கீதா பிஜ்லானி. ஒருகாலத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து காதல் கிசுகிசுகளில் சிக்கிய இவர், பின்னர் கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் புனே அருகில் பாவனா டேம் அருகில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த ஜூலை மாதம் சில மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்களையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்போது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சங்கீதா பிஜ்லானி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததாலும் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து தன்னுடைய புகார் எந்த நிலையில் என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளார். அது மட்டுமல்ல கிட்டதட்ட 20 வருடங்களாக தான் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு அங்கே வசிப்பதற்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல தோன்றுவதாகவும் கூறி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுவதாக கூறி அதற்கான உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம் சங்கீதா பிஜ்லானி.