மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் இணைந்து நடித்து ரிலீஸிற்கு தயாராகி வரும் படம் 'வா வாத்தியார்'. இதுதவிர பிரதீப் ரங்கநாதன் உடன் ‛எல்.ஐ.கே' படத்தில் நடித்துள்ளார். இதையொட்டி கிர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில், "பிரதீப் ரங்கநாதனை நான் கவனித்த வகையில் அவருடைய கணிப்பு எல்லாம் தெளிவாக உள்ளது . எல்.ஐ.கே பட டீசரில் 'எனக்கென யாருமில்லையே' என ஒரு பாடல் இடம் பெற்றது. அந்த பாடல் பத்து வருடத்திற்கு முன்பு அனிரூத் பாடியது. அந்தப் பாடலை இந்த டீசரில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என பிரதீப் தான் கணித்தார். பிரதீப் ரங்கநாதன் படப்பிடிப்பில் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு அழகான சூழலைக் கொண்டு வந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.




