இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'சிக்கந்தர்' ஹிந்திப் படம் படுதோல்வியைத் தழுவியது. அதற்குப் பின்னர் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், 'சிக்கந்தர்' படப்பிடிப்புக்கு இரவு நேரங்களில் மட்டுமே சல்மான் படப்பிடிப்புக்கு வந்தார். அதுதான் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமெண்ட் செய்திருந்தார் சல்மான் கான். நான் இரவு நேரங்களில் வந்ததுதான் படத் தோல்விக்குக் காரணம் என்றால், அந்த இயக்குனர் இயக்கிய தென்னிந்தியப் படத்தின் நாயகன் காலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிடுவாரே, அப்படம் தனது 'சிக்கந்தர்' படத்தை விடவும் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றதா என்றார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த கமெண்ட் சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 'சிக்கந்தர்' தோல்விக்குக் காரணத்தைச் சொன்ன முருகதாஸ் 'மதராஸி' தோல்விக்கும் காரணத்தைச் சொல்வாரா என சல்மான் ரசிகர்கள் கேட்கிறார்கள். பதிலுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் 'மதராஸி' வெற்றிப்படம் என்று கூறி வருகிறார்கள்.