இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

இப்போது 'ஜெயிலர் 2'வில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அடுத்த படம் குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரஜினி, கமல் இணையும் படமும் அறிவிப்புடன் இருக்கிறது. அதற்கு கதை, இயக்குனர் செட்டாகவில்லை என்று ரஜினியே சொல்லிவிட்டார். படத்தின் பட்ஜெட் விஷயத்தில் இன்னமும் பல கேள்விகள் வருவதாலும், கதை, இயக்குனர் விஷயத்தில் குழப்பம் நீடிப்பதாலும் அந்த படம் வருமா? வராதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'புஷ்பா 2, குட் பேட் அக்லி'யை தயாரித்த, மைத்ரி நிறுவனம் அடுத்து ரஜினி படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதை படத்தின் தயாரிப்பாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். வேல்ஸ் நிறுவனமும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க ரெடி. ஏஜிஎஸ் நிறுவனமும் ஒரு ரஜினி படம் தயாரிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறது. ஆனால், இயக்குனர், கதை விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதால், அடுத்த படத்தை இன்னமும் ரஜினி அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.