புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றதோடு அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வசூலை அள்ளினார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். கடந்த ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 'பாதி ராத்திரி' என்கிற படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ரதீனா இயக்கியுள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பார்வதி இருவரையும் முதன்முறையாக ஒன்றிணைத்து 'புழு' என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஆணவக் கொலையை மையப்படுத்தி வெளியான அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இந்த 'பாதி ராத்திரி' படம் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இருப்பதாலும் சவுபின் சாஹிர் அதில் கதாநாயகனாக நடித்திருப்பதாலும் இந்த படம் இயக்குனர் ரதீனாவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




