Advertisement

சிறப்புச்செய்திகள்

ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர்

26 நவ, 2025 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Suresh-Gopis-The-Commissioner-is-getting-ready-for-a-re-release-after-31-years
Advertisement

தமிழ், தெலுங்கு திரை உலகைப் போலவே மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்கள் அவ்வப்போது ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளியான கமிஷனர் திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் 4k தொழில்நுட்பத்தின் மாற்றப்பட்டு வரும் ஜனவரி மாதம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பிரபல கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்க, ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கோபியின் பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார்.

இந்த படம் சுரேஷ்கோபியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து அவரை முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திராவிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. தமிழில் சுரேஷ்கோபி என்கிற நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம் தான். அதேபோல ஆந்திராவிலும் இந்த படம் 100 நாள் ஓடியது. சமீப வருடங்களாக சுரேஷ்கோபி தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் ஏதோ ஒன்று இரண்டு மட்டுமே வெளியாகி வருகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது கமிஷனர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்புநடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் ... ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in