பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

கடந்த 2017 பிப்ரவரியில் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அது வீடியோவாக எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கடத்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் முதன்மை குற்றவாளியாக கார் கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். பின்னர் அதே வருடம் ஜூலை மாதம் நடிகர் திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 88 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சம்பவம் 2017ல் நடந்திருந்தாலும் 2020 ஜனவரியில் இருந்து தான் இந்த வழக்கு குறித்த விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சூடு பிடித்தது. இடையில் சில தடங்கல்கள் காரணமாக ஆமை வேகத்தில் நகர்ந்த இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் என எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.