Advertisement

சிறப்புச்செய்திகள்

என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம்

26 நவ, 2025 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Those-who-copied-my-story-are-not-changed-Writer-Rajesh-Kumar-is-angry
Advertisement


ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ள 'ரேகை' என்ற வெப்சீரிசை தினகரன் இயக்கி உள்ளார். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் 1995ல் எழுதிய 'உலகை விலை கேள்' என்ற நாவல்தான் இந்த வெப்சீரீஸ் கதை. சென்னையில் நடந்த இந்த வெப்சீரிஸ் விழாவில் கலந்து கொண்டு ராஜேஷ்குமார் பேசியது: நான் 1500க்கும் அதிகமான நாவல்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதினாலும் எனக்கு சினிமா அதிகம் செட்டாகவில்லை. ஒரு சிலர் வந்து பேசியிருக்கிறார்கள். சில படங்களுக்கு கதை கொடுத்து இருக்கிறேன். ஆனாலும், சென்னைக்கு வாங்க, எங்களுடன் சில நாட்கள் இருங்க, கதை குறித்து விவாதிக்கணும்னு சொல்வாங்க. அது சரிப்பட்டு வரவில்லை.

இப்போது கூட நடிகர் சந்தானம் என்னிடம் அடுத்த படத்துக்கு கதை குறித்து விவாதித்து சென்றுள்ளார். அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கி உள்ளேன். என்னுடைய பல கதைகள், கரு பல சினிமாக்களில் வந்துள்ளன. அதற்காக நான் கேஸ் போடவில்லை. காரணம், நான் கேஸ் போட்டால் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து அலையணும். அந்த கேஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும். என் லாயருக்கு பீஸ், தங்க இடம், பிளைட் டிக்கெட் என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரணும். கடைசியில், உங்களை மாதிரியே, அந்த இயக்குனரும் யோசித்து இருக்கலாமேனு தீர்ப்பு வரலாம்.

அதனால், அன்னதானம் மாதிரி, நான் கதை தானம், விஷய தானம் செய்து இருக்கிறேன் என நினைத்துக்கொள்வேன். சமீபத்தில் என் மனைவியுடன் ஒரு படம் பார்த்தேன். அப்போது பின்னால் இருந்த சிலர் டேய், இது ராஜேஷ்குமார் கதை கரு. நான் படித்து இருக்கிறேன் என கமென்ட் அடித்தார். எல்லாருக்கும் எல்லாம் தெரியும். அது எனக்கு போதும். தவிர, என் கதையை காப்பி அடித்து படம் எடுத்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அந்த காலத்தில் என் கெட்அப் பார்த்து இயக்குனர் மணிவண்ணன் உட்பட சிலர் நடிக்க அழைத்தார்கள், எனக்கு ஆர்வம் இல்லை. இப்போதும் என்னிடம் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. ரஜினி, கமல் உட்பட முன்னணி நடிகர்களுக்கும் என்னிடம் கதை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன்ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் ... ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in