புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனை அடுத்து சூட்டோடு சூடாக நான்கு மாத இடைவெளியிலேயே சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களிலேயே 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஓடும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு அவற்றில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் காட்சிகள் வெட்டி தனியாக எடுத்து வைக்கப்பட்டு மீதி படம் தான் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளதாம்.
துரந்தர் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஓடி தனது ஓட்டத்தை நிறைவு செய்த பிறகு கையில் மீதி இருக்கும் இரண்டரை மணி நேர காட்சிகளையும் இந்த இரண்டு பாகங்களுடன் பக்காவாக இணைத்து கிட்டத்தட்ட 20 எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸ் ஆக வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விடுபட்டுப் போன இந்த இரண்டரை மணி நேர காட்சிகளை பார்ப்பதற்காகவே இந்த இரண்டு பாகங்களையும் ரசித்த ரசிகர்கள் மீண்டும் இந்த வெப்சீரிஸை பார்க்க வருவார்கள் என்றும் அதன் மூலம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட லாபத்தை ருசிக்கலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.