உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

இந்திய ஓடிடி தள வெப் தொடர்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தொடர் 'தி பேமிலி மேன்'. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இதன் முதல் இரண்டு சீசன்களும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடர்கள் மூலம் ராஜ்-டிகே இரட்டை இயக்குனர்கள் புகழ்பெற்றனர்.
முதல் சீசனில் பிரியாமணியும், இரண்டாவது சீசனில் சமந்தாவும் கலக்கியது தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவன் இந்திய நாட்டை காக்கும் உளவாளியாக இருந்து சந்திக்கும் சவால்களை மிகவும் இயல்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிய விதத்தில் இந்த தொடர் மக்களை கவர்ந்தது.
தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு இதன் 3வது சீசன் நேற்று (நவ.21) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. உளவாளி மற்றும் பேமிலி மேன் ஸ்ரீகாந்த் திவாரியாக மீண்டும் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் பாகத்தில் காஷ்மீர் கதை களமாகவும், இரண்டாவது பாகத்தில் இலங்கை கதை களமாகவும் இருந்தது. இந்த பாகத்தில் வடகிழக்கு மாநிலங்கள் கதை களமாக உள்ளது. வெளிநாட்டு அரசியலை பேசிய தொடர், இந்த சீசனில் உள்நாட்டு அரசியலை பேசுகிறது.