துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம், ரஜினிகாந்த் படப்பிடிப்பு எப்போது, படம் குறித்த கூடுதல் தகவல் உண்டா என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்தவர், ‛‛ஏப்ரல் மத்தியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்றபடி வேறு தகவல்களை பகிர முடியாது'' என்று சிரித்தார்.
ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அடுத்த மாதம் ஷாருக்கான் வந்து நடிக்கப் போகிறார். அதனுடன் இந்த படம் நிறைவடையும். அதற்கடுத்து சிபி சக்கவர்த்திக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை படப்பிடிப்பு நடக்கும். அடுத்து கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறார் ரஜினி என்கிறார்கள்.
கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் சின்னது. அந்த படத்தைதான் சிபி இயக்குகிறார். நெல்சன் இயக்க, கமல், ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் பெரியது. அதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட ஜெயிலர் 2, அடுத்த இரண்டு படங்களுக்கு ரஜினியின் சம்பளம் ஒன்றுதான். அது, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் யாரும் வாங்காதது. அதனால் தான் 75 வயதில் இப்படி பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.