12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் | 3000 தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ | விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் | ஓடிடியில் தொடர் வரவேற்பில் டிராகன் |
மலையாள திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பிரபல எழுத்தாளராகவும் கதாசிரியராகவும் திரைப்பட இயக்குனராகவும் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் எம் டி வாசுதேவன் நாயர். குறிப்பாக ஒரு வடக்கன் வீரகதா, பழசிராஜா உள்ளிட்ட சரித்திர படங்கள் இவரது கதையில்தான் உருவாகின. கடந்த டிசம்பர் மாதம் தனது 91வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் எம் டி வாசுதேவன் நாயர். இந்த நிலையில் அவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா திரைப்படம் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் சந்து என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். ஆரோமல் என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ்கோபி நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் நடிகர் சுரேஷ்கோபி கோழிக்கோடு கொட்டாரம் பகுதியில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயரின் இல்லத்திற்கு நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “ ஒரு வடக்கன் வீர கதா திரைப்படம் இன்னும் 30 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை திரையரங்குகளில் வெளியாகும். அந்த அளவிற்கு காலத்தால் அழிக்க முடியாத காவியம் அது” என்று கூறினார்.