கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
மலையாள திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பிரபல எழுத்தாளராகவும் கதாசிரியராகவும் திரைப்பட இயக்குனராகவும் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் எம் டி வாசுதேவன் நாயர். குறிப்பாக ஒரு வடக்கன் வீரகதா, பழசிராஜா உள்ளிட்ட சரித்திர படங்கள் இவரது கதையில்தான் உருவாகின. கடந்த டிசம்பர் மாதம் தனது 91வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் எம் டி வாசுதேவன் நாயர். இந்த நிலையில் அவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா திரைப்படம் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் சந்து என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். ஆரோமல் என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ்கோபி நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் நடிகர் சுரேஷ்கோபி கோழிக்கோடு கொட்டாரம் பகுதியில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயரின் இல்லத்திற்கு நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “ ஒரு வடக்கன் வீர கதா திரைப்படம் இன்னும் 30 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை திரையரங்குகளில் வெளியாகும். அந்த அளவிற்கு காலத்தால் அழிக்க முடியாத காவியம் அது” என்று கூறினார்.