சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை அல்லு அர்ஜுனின் பாட்டி அல்லு கனகரத்தினம் காலமானார். இதனால் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த அல்லு அர்ஜுன் உடனடியாக ஐதராபாத் விரைந்தார். நேற்றே இறுதிச்சடங்கு நடந்து முடிந்தன. பாட்டி மறைவு குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் அன்பான பாட்டி அல்லு கனகரத்தினம் இப்போது தனது சொர்க்க வாசல் ஸ்தலத்தில் ஓய்வு எடுக்கிறார். அவரது அன்பு ஞானம் மற்றும் இருப்பு ஒவ்வொரு நாளும் எங்களை மிஸ் செய்யும். இந்த நேரத்தில் தங்கள் பாசத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் .




