காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரையுலகில் இப்போதும் பிஸியாக படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் வெகு சில சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. தற்போது மோகன்லால் நடிப்பில் ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆக.,28 (இன்று) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் நடிகர் பஹத் பாசிலின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பஹத் பாசில் குறித்து நடிகர் சத்யன் அந்திக்காடு கூறும்போது, “அவரை வைத்து நான் ஒரு இந்தியன் பிரணயகதா, ஞான் பிரகாசம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளேன். நானும் அவரது தந்தையும் (இயக்குனர் பாசில்) சமகாலத்து இயக்குனர்கள் என்பதால் என்னை ஆரம்பத்தில் அங்கிள் என்று தான் கூப்பிடுவார். ஆனால் என்னுடன் படத்தில் பணியாற்றிய துவங்கியபோது என்னை ஏட்டா (அண்ணன்) என்று இயல்பாக கூப்பிட துவங்கி விட்டார். அப்போது இருந்து எங்களுக்கு இடையே இருந்த அந்த வயது வித்தியாசம் காணாமல் போய்விட்டது. அதனால் அவருடன் எதையும் சகஜமாக பேசி வேலை வாங்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.