மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் 2022ல் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் காரை வாங்கி உள்ளார். 6 மாதத்திற்குள் இந்த காரில் நிறைய பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதோடு அந்த காரை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.




