10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியானாலும் கூட, ஆயிரம் கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி கட்டியிருந்த அதிநவீன கலாச்சார மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு தூதரான இம்மானுவேல் லெனனனும் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்வில் ஷாருக்கானை சந்தித்து பேசிய அவர் பிரான்ஸ் நாட்டில் ஷாருக் கான் தனது படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோளும் வைத்துள்ளார். இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இம்மானுவேல் லெனன், “ஷாருக்கானை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். மீண்டும் அவரை பிரான்சில் வந்து படப்பிடிப்பு நடத்துங்கள் என கூறி கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன். பிரான்சில் உள்ள மக்கள் பாலிவுட்டில் உள்ளவர்களை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படப்பிடிப்பு நடத்த அழைத்ததிலும் ஷாருக்கானை கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன் என்று அவர் கூறியதிலும் இருந்து, இதற்கு முன்பு ஷாருக்கான் பிரான்சில் படப்பிடிப்பு நடத்த சென்ற சமயத்தில் ஏதோ சங்கடங்களை சந்தித்திருக்கிறார் என்பதையும் அதனால் அவரது சமீபத்திய படங்களின் படப்ப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்திருந்தாலும் பிரான்ஸை அவர் தவிர்த்து வருகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.