மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியாகி உள்ள ‛தாய் கிழவி' படம் வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. சென்னையில் நடந்த தாய்கிழவி பட வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது...
நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவது முக்கியமான விஷயம். நம்மை சுற்றி பிரச்னைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதற்கு இடையே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் எப்போதுமே நல்ல ரசிகனாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்தின் மூலம் எனக்கு பொறுப்புணர்வு கூடியிருக்கிறது.
என் அம்மா, அக்கா, மனைவி ஆகியோரை பவுனுத்தாய் கதாபாத்திரம் நினைவூட்டியது. சிறிய வருமானத்தை கூட சேமித்து அதை பெரிதாக்கும் அம்மா, அக்கா, மனைவி என அனைத்து பெண்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம். இப்போதும் என் மனைவிதான் என் வீட்டு கணக்கு வழக்குகள் பார்க்கிறார். வெளியூர் சென்றால் அவரிடம் தான் பணம் கேட்கிறேன்.
இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். கற்றல் மட்டுமே கடைசி வரைக்கும் மாறாது. இந்த படத்தின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டதை வைத்தே இனி என் படங்களில் நடிக்கப்போகிறேன். அதற்காக இயக்குநரின் முடிவுகளில் தலையிட மாட்டேன். சில வரைமுறைகளுக்கு உட்பட்டு படங்களில் நடிக்கப்போகிறேன். ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் இந்த படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து என் நிறுவனம் சார்பில் நல்ல படங்கள் தயாரிக்க போகிறேன். கனா, அமரன், தாய் கிழவி மாதிரியான படங்கள் நிறைவு தருகிறது. சிவகுமார் முருகேசன் நான் இணையும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. வசூல், எண்ணிக்கை தாண்டி இந்த படம் நல்ல நிறைவு.
தாய் கிழவி பட ப்ரிவியூ காட்சியை பார்த்தபோது இயக்குனர் சிவகுமார் முருகேசன் தந்தை என்னையும், மகன் சிவகுமாரையும் கட்டிப்பிடித்தார். அந்த தருணத்தில் என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன் எனக் கூறி கண்கலங்கினார் சிவகார்த்திகேயன்.