மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் சொகுசு பங்களா ஒன்றை ராஹா என்ற பெயரில் கட்டி உள்ளார்கள். 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் விரைவில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் குடியேற போகிறார்கள்.
ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த சொகுசு பங்களாவை யாரோ வீடியோ எடுத்து அதை இணையத்தில் வைரலாக்கி உள்ளார்கள். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஆலியா பட். இதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛மும்பையில் இடவசதி குறைவாக இருப்பதால் ஒரு வீட்டின் ஜன்னல் இன்னொரு வீட்டை பார்த்தபடி தான் வீடு கட்ட முடியும். அதற்காக இதை வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் உடனே நீக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆலியா பட்.




