பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் கடந்த சில வருடங்களாக தமிழிலும் அடியெடுத்து வைத்து, தனுஷ், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்தார். அதிலும் 'அசுரன்' பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் நீண்ட நாட்களுக்கு முன்பே தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கக் கூடாதா என்பது போன்று தங்களது ஆதங்கத்தை எழுப்பினார்கள்..
அதேசமயம் 1998லேயே நடிகை மஞ்சு வாரியர் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் ஒரு படத்தில் நடித்தார் என்பதும் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது என்கிற ஆச்சரிய தகவலும் சமீபத்தில் மஞ்சுவாரியரின் ஒரு பேட்டி மூலம் வெளியாகி உள்ளது.
1998ல் ஜெயராம், சுரேஷ் கோபி நடிப்பில் இயக்குனர் சிபி மலயில் டைரக்ஷனில் உருவான 'சம்மர் இன் பெத்லகேம்' திரைப்படம், வரும் டிசம்பர் 12ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பேசும்போது, “ஆரம்பத்தில் இந்த படம் தமிழில் உருவாவதாக தான் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் பிரபுவுடன் இணைந்து எனக்கு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அந்த படம் அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் இயக்குனர் சிபி மலயில் மற்றும் கதாசிரியர் ரஞ்சித் இருவரும் இந்த படத்தில் இணைந்து மலையாளத்தில் இதை உருவாக்கினார்கள். இப்போதும் கூட இந்த கதை தமிழுக்காக தான் உருவாக்கப்பட்டதா என்கிற ஆச்சரியம் என்னிடமிருந்து விலகவில்லை” என்று கூறியுள்ளார்.