‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

கடந்த 2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, வித்யூத் ஜம்வல், சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. தற்போது அஞ்சான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து நீளத்தை குறைத்துள்ளனர்.
லிங்குசாமி கூறுகையில், "அஞ்சான் படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக நீக்கியுள்ளோம். அஞ்சான் ரீ ரிலீஸ் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றால் அஞ்சான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளார்.