தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை | ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா சர்மாவின் படம் | இதயக்கனி, அன்புள்ள ரஜினிகாந்த், போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் |

பிரபுசாலமன் இயக்கும் கும்கி 2 படத்தில் ஹீரோவாக நடித்து இருப்பவர் மதி. இவர் லிங்குசாமி உறவினர் என்று கூறப்பட்ட நிலையில் மதி யார் என்பது குறித்து லிங்குசாமி விரிவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் 'எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் இல்லை. என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு சரண்யா என்று பெயரிட்டு, நாங்கள் பாசமாக வளர்ந்தோம். சென்னையில் அவர் படிக்க வந்தபோது, மதியை காதலித்தார். அது எங்கள் குடும்பத்திற்கு தெரியாது. ஆனால், மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது பிடி கொடுக்கவில்லை. அப்போது மதி காதல் தெரிய வந்தது.
என் தம்பி உட்பட பலரும் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதியை ஒரு வழி ஆக்கிவிடுவோம் என்ற முடிவில் இருந்தனர். ஒருநாள் என்னை சந்திக்க வந்த மதி தனது உண்மையான காதலை சொல்லி பீல் பண்ணினார். இவர் சரியான தேர்வு என நினைத்து, நானே சாமியார் வேடமிட்டு குடும்பத்தில் சென்று பேசினேன். கடைசியில் அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. அந்த மதியை கும்கி 2 படத்தில் ஹீரோவாக ஆக்கினோம்' என்றார்.
மதியும் கும்கி 2 படவிழாவில் லிங்குசாமி, அவர் தம்பி போஸ் மற்றும் தனது மனைவி சரண்யாவுக்கு நன்றி சொன்னார்.