நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து பெறுவதும் பின்னர் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதும் அவ்வப்போது நடப்பது தான். அந்த வகையில் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்று தனியே வசிக்கிறார். இந்த நிலையில் பேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்தபோது அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.
அதன் பிறகு அவர்கள் பழகும் விதம், வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைத்தையும் பார்த்து அவர்கள் இருவருக்கும் காதல் என்பது போல செய்திகள் பரபரப்பாக வெளியாகின. இதை இருவரும் மறுக்கவும் இல்லை. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் கிடைப்பது என்பது அரிதாக தான் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ராஜை, சமந்தா காதலுடன் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பது போன்று தானாகவே முன் வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ராஜும் தனது மனைவியிடம் இருந்து 2022-ல் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்பவர் என்பதால் விரைவில் சமந்தாவும் இயக்குனர் ராஜும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றே சொல்கிறார்கள்.




