அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மீடியாக்களுக்கு தெரியாமல் சத்தம் இல்லாமல் நடத்தி முடித்த சமந்தா, அதன்பிறகு தனது இணையப் பக்கத்தில் அதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதோடு, இந்த இரண்டாவது திருமணத்திற்கு பிறகு மும்பையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் கணவருடன் குடியேறி இருக்கிறார் சமந்தா. இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் வந்துள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது சமந்தாவிடத்தில் மீடியாக்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அவர்களை கண்டு கொள்ளாமல் இருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.