அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? |

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மீடியாக்களுக்கு தெரியாமல் சத்தம் இல்லாமல் நடத்தி முடித்த சமந்தா, அதன்பிறகு தனது இணையப் பக்கத்தில் அதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதோடு, இந்த இரண்டாவது திருமணத்திற்கு பிறகு மும்பையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் கணவருடன் குடியேறி இருக்கிறார் சமந்தா. இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் வந்துள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது சமந்தாவிடத்தில் மீடியாக்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அவர்களை கண்டு கொள்ளாமல் இருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.




