பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் |

இயக்குனர் ராஜ் நிடிமொருவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து, கதையின் நாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்தை ஏற்கனவே அவர் நடிப்பில் ஓ மை பேபி என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், சிறுவயதில் இருந்தே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்று நான் நினைப்பேன். என்னிடத்தில் திட்டமிடல் எப்போதுமே இருக்கும். குறிப்பாக என்னை பாசிட்டிவ் எனர்ஜியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பதால் ரீல்ஸ் போடுபவர்கள், நெகட்டிவா பேசுபவர்களை தவிர்த்து விடுகிறேன். குறிப்பாக வலைதளங்களில் பொய்யான அவதூறான செய்திகளை யார் பரப்பினாலும் அது போன்ற நபர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன். அந்த அளவுக்கு எனக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட நெகட்டிவாக செயல்படுவதை கூட நான் விரும்ப மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.